Saturday 18th of May 2024 10:30:33 AM GMT

LANGUAGE - TAMIL
-
தனுறொக்  தலைவர் மீது வாள்வெட்டு நடத்திய சந்தேகத்தில் ஐவர் கைது!

தனுறொக் தலைவர் மீது வாள்வெட்டு நடத்திய சந்தேகத்தில் ஐவர் கைது!


தனுறொக் வாள்வெட்டுக் குழுவின் தலைவர் தனுமீது வாள்வெட்டு நடத்திய சந்தேகத்தின் பேரில் 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட 5 பேரும், கைதடி மற்றும் அச்சுவேலிப் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவார்.

சுமார் 23,24 மற்றும் 25 வயதுடைய ஆவா குழுவைச் சேர்ந்தவர்களே பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் பெருமாள் கோவில் பகுதியில் நேற்று முன்தினம் மதியம் காரில் வந்த 7 பேர் தனுறொக் என அழைக்கப்படும் தனு மீது வாள்வெட்டை மேற்கொள்ள காரணமாக இருந்த பிரதான நபர்கள் எவரும் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைதுசெய்யப்படவில்லை. இவர்கள் கொண்டு வந்த கார் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்டவர்களிடம் விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றதாகவும், விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென்றும் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE